Sunday, 12th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரத்தில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக கொண்டாட்டம்

செப்டம்பர் 09, 2023 11:54

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ராசிபுரம் சௌராஷ்டிரா விப்ர குல சமூக சபா அறக்கட்டளை ஸ்ரீ சந்தான வேணுகோபால சுவாமி குழு சார்பில் கோகுலாஷ்டமி விழா இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

பாமா ருக்மணி சுவாமி திருக்கல்யாண வைபவம், சுவாமி திருவீதி உலா மற்றும் கிருஷ்ணர் ராதை வேடம் போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

முன்னதாக சாமி கண் திறப்பு நிகழ்ச்சி தொடர்ந்து பஜனை  தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து ஏராளமான சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் பெரிய குழந்தைகள் வரை கிருஷ்ணர் ராதா வேடம் அணிந்து வருகை புரிந்தனர்.

இதில்  சிறப்பாக அலங்காரம் செய்து அழைத்து வரப்பட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியை சௌராஷ்டிரா விபர குல சமூக அறக்கட்டளை தலைவர் சி .கே. சீனிவாசன், மற்றும் இயக்குனர் ஜெ. ஜெயப்பிரகாஷ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜவஹர்கலால், ஆர். வரலட்சுமி, கிஷன் லால், ஜனரஞ்சனா, 
கே.ஏ கதிரவன், கே. மாதவன், சௌராஷ்டிரா விப்ரகுல சமூக அறக்கட்டளை பொருளாளர் வி. சிவராமன், மற்றும் ஏ. துளசிராமன், எஸ்.எஸ். ரகு,  சிவக்குமார், சுப்பிரமணியன், மாதவன், தேவகி, மூர்த்தி, சுகுமார், ஸ்ரீதர், மோகன், ராஜேஸ்வரி, பத்மநாபன், ராஜாராம், கவுன்சிலர்கள் ஸ்ரீ வித்யா பாஸ்கர், சசிரேகா சதீஷ், மற்றும் சதீஷ்குமார் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் சௌராஷ்டிரா விப்ர குல சமூக சபா அறக்கட்டளையினர் சிறப்பாக கோகுலாஷ்டமி விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புச்செய்திகள்